அவுரங்காபாத் ரயில் விபத்தில் தப்பியவர் பேட்டி
அவுரங்காபாத், மே-9 எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட்டன. என் கண்முன்னே 16 பேரின் உடல்களும் சிதறி, தூக்கி எறியப்பட்ட காட்சியை என்னால் மறக்க முடியாது என்று அவுரங்காபாத்தில் வெள்ளியன்று நடைபெற்ற சரக்கு ரயில் விபத்தில் உயிர் தப்பியவர் கூறி யுள்ளார். மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்றனர். அவுரங்காபாத்-ஜல்னா அருகே ரயில் பாதையில் வெள்ளிக் கிழமை நடந்து சென்றபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவா ளத்தில் படுத்து தொழிலாளர்கள் பலர் தூங்கிவிட்டனர்.
காலை 5.30 மணி அளவில் அந்த வழியே வந்த சரக்கு ரயில் தண்டவா ளத்தில் தொழிலாளர்கள் படுத்து தூங்கி யவர்கள் மீதி ஏறியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் உயிர் தப்பினர். தப்பியவர்கள் விவரம்: மாண்ட்லா வைச் சேர்ந்த இந்தர்லால் துர்வே (20), உமரியா மாவட்டத்தைச் சேர்ந்த வீரேந்திரசிங் கவுர் (27), ஷாஹ்தோல் பகுதியைச் சேர்ந்த சிவ்மான் சிங் கவுர் (27). காயமடைந்தவர் கஜேரி மாவட்டத்தைச் சேர்ந்த சஜ்ஜன் சிங். இந்தச் சம்பவத்தில் சிவமான் சிங் தண்டவாளத்திலிருந்து வெகுதொலை வில் ஒதுங்கிப் படுத்திருந்ததால் உயிர் தப்பினார். ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு தன்னுடன் வந்தவர்களை எழுப்பச் சத்தமிட்டும் அவர்கள் எழுந்தி ருக்காததால் கண்ணிமைக்கும் நேரத் தில் ரயில் ஏறியது.
அந்த 16 பேரின் உடல்களுடன், சிவ மான் சிங் மத்தியப் பிரதேசம் சென்றார். இந்த விபத்து குறித்து சிவமான் சிங் கூறியதாவது:- ‘’மகாராஷ்டிராவின் அவுரங்கா பாத்தை ஒட்டிய மாவட்டமான ஜல்னா வில் உள்ள உருக்காலையில் நாங்கள் அனைவரும் வேலை செய்தோம். கொரோனா ஊரடங்கால் வேலை யில்லாததால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள எங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தோம்.
இதற்காக ரயில் பாதை வழியாக 36 கி.மீ. நடந்து கர்நாட் வந்து சேர்ந்தோம். எனக்கு முன்னால் சென்றவர்கள் வேக மாகச் சென்று தண்டவாளத்தில் அமர்ந்துவிட்டனர். எனக்குக் கால் வலி எடுத்ததால், தண்டவாளத்தில் இருந்து இறங்கி தரைப்பகுதியில் படுத்து விட்டேன். என்னுடன் வந்தவர்களும் தண்டவாளத்தில் அமர்ந்தவாறே அசதி யில் படுத்துத் தூங்கிவிட்டார்கள் அதிகாலை 5 மணிக்கு இருக்கு மென நினைக்கிறேன். வெகு தொலை வில் ரயில் வரும் சத்தம் கேட்டது. என்னால் எழுந்து நடக்க முடியாததால், நான் சத்தமிட்டு அனைவரையும் எழுப்ப முயன்றேன். ஆனால், உடல் அசதி யால் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நான் பலமுறை சத்தமிட்டும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. அடுத்த சில வினாடிகளில் ரயில் 16 பேரின் மீதும் ஏறி உடல்கள் சிதறி யதைப் பார்த்த காட்சியை என்னால் மறக்க முடியாது.
எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. அந்தக் காட்சி என்னை மிகவும் வேத னைப்படுத்துகிறது. என்னால் இன்னும் கண் அயர்ந்து தூங்க முடியவில்லை. கண்ணை மூடினாலே அந்தக் காட்சி தான் கண்முன் வருகிறது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த எனது குடும்பத்தினர் என்னைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றனர். என்னு டைய செல்போனில் சார்ஜ் இல்லாத தால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விபத்து நடந்த பின் அதிகாரிகளுடன் சென்று உடலை அடையாளம் காண்பிப்பதற்கும் அவர் களின் கேள்விக்குப் பதில் அளிப்பதி லும் நேரம் சென்று கொண்டேயிருந்தது என்றார்.
தப்பியவர்களில் மற்றொருவரான வீரேந்திர சிங் கூறுகையில் “நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல பயண பாஸ்க ளுக்கு விண்ணப்பித்திருந்தோம், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்க வில்லை. என் மனைவியும் குழந்தை களும் எனது சொந்த கிராமத்தில் உள்ள னர். வேறுவழியில்லாமல் கால்நடை யாக நாங்கள் புறப்பட்டோம்” என் றார்.